அகவிழி வாசிப்பு இயக்கம் - 20
யாருக்கோ கட்டிய வீடு (நாவல்)
எழுத்தாளர் : அமர்நாத்
இணைய வழி இலக்கியச் சந்திப்பு இருபதில் எழுத்தாளர் அமர்நாத் அவர்கள் எழுதிய யாருக்கோ கட்டிய வீடு நாவல் வாசிக்கப்பட்டது. 509 பேர் கொண்ட குழுவில் 300 நூல்கள் வாங்கப்பட்டு, வாசிக்கப்பட்டது.
இது குறித்த கருத்துகளை 2020 பிப்ரவரி மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 194 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 80 ஆண்களும், 114 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
